1. முதலில் நீங்கள் ’’ முதலீட்டாளரா ?’’ அல்லது ’’தினசரி வர்த்தகரா?’’ என்பதை முடிவு செய்யவும்.....
2. நீங்கள் செய்த வர்த்தகம் உங்களுக்கு எதிராக செல்வதை
உணர்ந்தால்...தயவு செய்து எப்போது வெளி வரலாம் என்று
உணர்ச்சி வசப்படாமல் சிந்திக்கவும்....
3. அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்குகளை
தேர்ந்தேடுக்கவும்.....
4. தயவு செய்து குறைந்த விலையில் கிடைக்கிறது என்று வாங்காதீர்கள் ( ஏனென்றால் இன்னும் விலை குறைய நிறைய வாய்ப்பு இருக்கும் )
5. அதிகமாக டிரேடிங் செய்வதை தவிருங்கள்...
6. நம் மக்கள் பலர் நஷ்டம் வந்தால் கை கட்டி கொண்டு பார்த்து கொண்டு இருப்பார்கள் ஆனால் அதே லாபத்தே வளர விட மாட்டார்கள் ...உடனே கவர் செய்து விடுவார்கள் .....அதனால் ஒவ்வொரு வர்த்தகத்திலும் ஸ்டாப்-லாஸ் கண்டிப்பாக பின்பற்றுங்கள்.....
7. நஷ்டத்தை குறைக்க மீண்டும் வாங்கியோ அல்லது விற்றோ ஆவ்வேரஜ் செய்யாதீர்கள்....அந்த வர்த்தகத்தை மறந்து அடுத்த வர்த்தகத்திற்கு தயாராகுங்கள்....
8. இன்னும் சிலர் இருக்கிறார்கள், எதாவது ஒன்று அல்லது இரண்டு பங்குகளை மட்டுமே பார்த்து கொண்டு இருப்பார்கள்....சில சமயம் நாம் எதிர் பார்த்த நகர்வுகளை அந்த பங்கு தராமல் பல் இளித்து விடும்...அதனால் ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கிணங்க தினசரி கூட வெவ்வேறு பங்குகளில் வர்த்தகம் செய்யலாம்... (வர்த்தகம் தொடங்குவதற்கு முன் அதன் நகர்வுகளை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளவும் )
9. தினமும் நீங்கள் செய்த வர்த்தகத்தின் வெற்றி தோல்விகளை குறிப்பெடுத்து கொள்ளுங்கள்...தோல்விகளை எல்லாம் வெற்றி ஆக்கும் வழிகளை கண்டறியுங்கள்.... வெற்றி தோல்விகளை பக்குவமாக எடுத்து கொள்ள மனத்தை தயார் படுத்துங்கள்....
10. ஒரு நாளைக்கு சுமார் 50000 TO 70000 கோடிகள் வர்த்தகம் ஆகின்றன ...இதில் என்னால் நான் விருப்பப்பட்ட நேரத்தில் எனக்கு தேவையான பணத்தை எடுத்து கொள்ள முடியும் என்ற எண்ணத்திற்கு வாருங்கள் ... என் வீட்டு பீரோவிலிருந்து பைசா எடுக்க எனக்கென்ன பயம் என்ற நிலை வர வேண்டும். எப்போ வேணும்னாலும் நாம கோடிகள் சம்பாதிக்கலாம் ...